பொத்துவில் செங்காமம் நான்காம் கட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று (2026.09.07) இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாம், செங்காமம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.எம். அர்ஷாத் மௌலானா மற்றும் செயலாளர் எம்.எம்.ஏ.ஆர். அஸ்மி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வில் பொத்துவில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி Dr. உவைஸ் பாருக் அத்துடன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கலந்து கொண்டதுடன், வைத்தியர்களான ஏ.எம்.எம். ஹம்சாத், எம்.எம்.எல். பாத்திமா, றிஸ்னா மற்றும் எம்.எச்.எப். ஹானியா ஆகியோரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கினர்.
இந்த இலவச மருத்துவ முகாமில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இம்மருத்துவ முகாம் காலை 8.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.