அரசாங்கம் இருக்கும் சூழ்நிலையைச் சமாளித்து எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால், மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே அந்த நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் ஒரே நேரத்தில் குறைக்க முடியாது என்றும், எதிர்வரும் மாதத்தில் எரிபொருள் விலையை மேலும் குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.