ශ්රී ලංකා පොලීසියේ 160 වැනි සැමරුම සඳහා තිඹිරිගස්යාය ක්ෂේත්ර බලකා මූලස්ථානයේදී අද (03) පස්වරුවේ එක්වීමි.
ගෙවී ගිය වසර 160ක කාලය තුළදී රටේ පොදු ජනතාව ව්යසනයන්ට මුහුණ දුන් සෑම අවස්ථාවකම ශ්රී ලංකා පොලීසිය පොදු ජනතාව වෙනුවෙන් සහ මහජන සාමය සහ ආරක්ෂාව වෙනුවෙන් ඉටු කළ භාරදූර කාර්යභාරය මෙහිදී ඇගයීමට ලක් කළෙමි.
විවිධ යුගවල, විවිධ කාර්යභාරය වෙනුවෙන් කැපවූ ශ්රී ලංකා පොලීසිය වෙත මේ වන විට පැවරී ඇති ප්රමුඛතම වගකීම වන්නේ විෂ මත්ද්රව්ය ජාවාරම සහ ඒ හා බැඳුණු අපරාධ කල්ලි මැඩපැවැත්වීමේ ජාතික වගකීම බව පෙන්වා දෙමින්, ඒ වෙනුවෙන් වෘත්තීය වගකීමෙන් එහා ගිය සමාජ වගකීමක් ලෙස සලකා කැපවන ලෙසද සියලු දෙනාට ආරාධනා කළෙමි.
පසුගිය වසර දෙක තුළ මෙරට වැඩිම මත්ද්රව්ය වැටලීම් ප්රමාණය සහ අත්අඩංගුවට ගැනීම් සිදු කිරීමත්, විදෙස්ගතව සැඟවී සිටින සන්නද්ධ අපරාධකරුවන් 74 දෙනෙකු ජාත්යන්තර රාජ්යයන්ගේ සහාය ඇතිව මෙරටට ගෙන ඒමත් ඇගයීමට ලක් කරමින්, මේ රට අපරාධ රාජ්යයක සිට සාමකාමී රාජ්යයක් දක්වා පරිවර්තනය කිරීමට අවශ්ය නීති සම්පාදනය සහ යටිතල පහසුකම් උපරිමයෙන් සලසා දීමට කටයුතු කිරීමටත්, අවශ්ය නම් ව්යවස්ථා සංශෝධන වුවද සිදු කිරීමටත් කිසිසේත් නොපැකිළෙන බවත් අවධාරණය කළෙමි.
ශ්රී ලංකා පොලීසිය ඉතාමත් ගෞරවාන්විත සේවාවක් බවට පරිවර්තනය කිරීම වෙනුවෙන් නිසි උසස්වීම් ක්රමවේදයක් සකස් කරන බවත්, ලබන වසරේ මැද වන විට අලුත් නිල ඇඳුමක් ලබා දීමට අපේක්ෂා කරන බවත්, අවදානම් දීමනාවක් ලබාදීම මෙන්ම අවශ්ය යටිතල පහසුකම් සංවර්ධනයට සහ අවශ්ය බඳවා ගැනීම් සිදු කිරීමටත් කටයුතු කරන බවත් මෙහිදී සඳහන් කළෙමි.
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இன்று (03) பிற்பகல் திம்பிரிகஸ்யாய பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டேன்.
கடந்த 160 வருட காலப்பகுதியில் நாட்டின் பொதுமக்கள் அனர்த்தங்களை எதிர்நோக்கிய அனைத்து சந்தர்ப்பங்களிலும், இலங்கை பொலிஸ், பொதுமக்களுக்காகவும் இந்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காகவும் ஆற்றிய பொறுப்புமிக்க பங்களிப்பை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டினேன்.
பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை பொலிஸுக்கு, தற்போது வழங்கப்பட்டுள்ள முதன்மையான பொறுப்பு, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றவியல் கும்பல்களைக் கட்டுப்படுத்தும் தேசியப் பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்டியதுடன், இதற்காக தொழில்சார் பொறுப்புக்கு அப்பால் ஒரு சமூகப் பொறுப்பாகக் கருதி அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்நாட்டில் அதிகமான போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் மற்றும் கைதுகள் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடைய 74 குற்றவாளிகளை சர்வதேச நாடுகளின் உதவியுடன் இந்நாட்டிற்கு அழைத்து வந்தமையையும் பாராட்டியதுடன், இந்நாட்டை குற்றச் செயல்கள் நிறைந்த நாடு என்பதிலிருந்து ஒரு அமைதியான நாடாக மாற்றுவதற்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதுடன், தேவைப்பட்டால் அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்வதற்கும்கூட எப்போதுமே தயங்கப் போவதில்லை என்றும் வலியுறுத்தினேன்.
இலங்கை பொலிஸை மிகச் சிறந்த கௌரவத்துக்குரிய சேவையாக மாற்றியமைப்பதற்காக முறையான பதவி உயர்வு முறை உருவாக்கப்படும் என்றும், அடுத்த வருட நடுப்பகுதிக்குள் புதிய சீருடை வழங்க எதிர்பார்ப்பதாகவும், ஆபத்துக் கொடுப்பனவு வழங்குவதுடன் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தேவையான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கு குறிப்பிட்டேன்.
I joined the 160th anniversary commemoration of the Sri Lanka Police at the Thimbirigasyaya Field Force Headquarters this afternoon (03).
I paid tribute to the vital role played by the Sri Lanka Police over the past 160 years, particularly in serving the public and maintaining public peace and security whenever the people of the country have faced disasters and other challenges.
I noted that the foremost responsibility currently entrusted to the Sri Lanka Police, which has dedicated itself to a range of duties across different eras, is to fulfil the national responsibility of combating the illicit drug menace and the criminal gangs associated with it. I called upon all police personnel to regard this not merely as a professional responsibility, but as a broader social responsibility, and to dedicate themselves accordingly.
I also commended the Sri Lanka Police for conducting the highest number of drug raids and arrests in the country over the past two years, as well as for bringing 74 criminals who had been hiding overseas back to Sri Lanka with the assistance of foreign governments. I emphasised that every effort would be made to provide the necessary legislation and infrastructure to transform the country from a criminal state into a peaceful state and that we would not hesitate to introduce even constitutional amendments if necessary.
I also stated that a proper promotion scheme would be introduced to transform the Sri Lanka Police into a highly respected service. I noted that a new uniform is expected to be provided by the middle of next year, while steps will also be taken to provide a risk allowance, develop the necessary infrastructure and undertake the required recruitment.